பொழுதுபோக்கு

நயன்தாராவுக்கு 10 கோடி : சிம்புவுக்கு ஃப்ரீ… சொல்லியடிக்கும் தனுஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வரும் தனுஷ், பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்.

அந்த வகையில், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தான் தயாரித்து இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு முன்னர் வரை நட்புடன் பழகி வந்த தனுஷ், நயன்தாரா, இப்படத்திற்கு பின்னர் எலியும் பூனையுமாக மாறினர். அதற்கு காரணம் அப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட மனக்கசப்பு தான்.

கொடுத்த பட்ஜெட்டைவிட கூடுதலாக 10 கோடி வரை செலவிழுத்து வைத்ததாக நயன்தாரா மீது அதிருப்தியில் இருந்தார் தனுஷ். இந்த செலவினால் அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியும் தனுஷுக்கு பெரியளவில் லாபம் கிடைக்காமல் போய்விட்டது.

இதனிடைய நடிகை நயன்தாரா, தன்னுடைய ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரி இருந்தார். ஏனெனில் நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது தான் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது.

அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை நயன்தாராவை மனதில் வைத்து தான் எழுதி இருந்தார் விக்னேஷ் சிவன். இதனால் அந்தப் பாடல்களை தனது ஆவணப்படத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார் நயன். ஆனால் நடிகர் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

இதையடுத்து, அந்த பாடல்கள் இன்றி ஆவணப்படத்தை வெளியிட முடிவெடுத்த நயன்தாரா, நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த 3 விநாடி வீடியோ காட்சியை அந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்.

இந்த வீடியோவை நீக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், நீக்காவிட்டால் தனக்கு 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இப்படி நயன்தாராவிடம் 3 செகண்ட் வீடியோவுக்காக 10 கோடி கேட்ட தனுஷ், அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை கதைக்களத்தில் உருவாக உள்ள படத்திற்காக நடிகர் சிம்புவிடம் ஒரு ரூபா கூட வாங்காமல் அதற்கு தடையில்லா சான்று வழங்கி இருந்தார்.

இந்த விவகாரத்தில் தனுஷ், சிம்பு, நயன்தாராவை குறிப்பிட்டு நயன்தாராவுக்கு மட்டும் வஞ்சகம், நயனின் முன்னாள் காதலனுக்கு இலவசமா என கலாய்த்து வருகின்றார்கள்.

(Visited 4 times, 4 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content