பொழுதுபோக்கு

குடும்ப நல கோர்ட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா கூறிய அதிர்ச்சி தகவல்…

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்திருந்தனர். மற்ற ஜோடிகளை போல் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தெரிவித்து இருந்தார்கள்.

மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவது ரஜினிகாந்த்திற்கு விருப்பம் இல்லை எனவும், இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இன்று தங்களுடைய விவாகரத்து தொடர்பாக குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்து விட்டார். தனுஷ் வர தாமதமானதால் இந்த வழக்கு முதலில் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தனுஷ் வந்தவுடன் வழக்கு விசாரிக்கப்பட்டது.

இருவருமே தங்களது பிரிவில் ரொம்பவும் உறுதியாக இருப்பதால் நவம்பர் 27ஆம் தேதி விவாகரத்து வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இருவரும் சேர அதிக வாய்ப்பு இருப்பதாக நிறைய கதைகள் வெளி வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இருவருமே சேருவதற்கு விருப்பமில்லை என்று நீதிமன்றத்திலேயே சொல்லி இருப்பதால் இவர்களது விவாகரத்தும் உறுதியாகி உள்ளது.

(Visited 55 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்