இலங்கை; தேசபந்துவின் ரிட் மனு: நீதிமன்றம் அடுத்த வாரம் முடிவை அறிவிக்கும்

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.
இந்த ரிட் மனு தொடர்பான முடிவு 2025 மார்ச் 17 அன்று வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகிறார்.
கடந்த வாரம், தென்னக்கோன் தன்னைக் கைது செய்வதற்கான மாத்தறை நீதவான் உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்தார்.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.