உலகம்

மடகஸ்காரில் கரையை கடந்த கெசானி புயல் – 09 பேர் பலி!

மடகஸ்காரில் கெசானி (Gezani ) புயல் நள்ளிரவில் கரையைக் கடந்துள்ள நிலையில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு துறைமுக நகரமான டோமாசினாவில் (Toamasina) உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாகவும், சுமார் 19 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 195 கிமீ (121 மைல்) வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டின் வடகிழக்கில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!