CT Semi Final – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.
ரோகித் சர்மா 28 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் அவுட்டாகினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் விராட் கோலி அரை சதம் கடந்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார். பாண்ட்யா
இறுதியில், இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.