அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்பான பதவியில் இருந்த அவர் முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அவரின் அறிவிப்புகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல் நிலை தொடர்பான தகவல்களை இவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான நபராகக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!