ஜனாதிபதியின் வீட்டிற்கு தீ வைப்பு: சந்தேகநபரான ஆசிரியர் ஒருவர் கைது
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
2022ல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது, ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது





