ஐரோப்பா செய்தி

நீண்ட நாட்களின் பின் பொதுமக்களை சந்திக்க தயாராகும் பிரித்தானிய இளவரசி கேட்!

பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் பொதுமக்களுக்கு முன் தோன்ற தயாராகியுள்ளார்.

புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு முதல் முறையாக மக்களை அவர் மக்கள் முன் தோன்றியுள்ளார்.

5 மாதங்களுக்கு முன் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதில் தமக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

அப்போதிலிருந்து இளவரசி chemotherapy எனும் புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

சுகாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் பொதுமக்களிடையே தோன்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் முழுமையாகக் குணமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய லண்டனில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் “Trooping the Colour” எனும் ராணுவ அணிவகுப்பில் தம்முடைய 3 பிள்ளைகளுடன் இளவரசி கேட் கலந்துகொள்ளவிருக்கிறார்.

பிரித்தானிய மன்னரின் சடங்குபூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும் அந்த அணிவகுப்பு இன்று நடைபெறும்.

மன்னர் சார்ல்ஸ், ராணி கமிலியா, குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் ஆகியோரும் அணிவகுப்பில் கலந்துகொள்வர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!