ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது -பிரதமர்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton)தொழிலாளர் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

உலக நிலைமை தற்போது நிச்சயமற்றதாக உள்ளதெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல் நமது போர் அல்ல என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் தொடர்பான புதிய மோதல் உலகளவில் கவலைக்குரிய சூழ்நிலையை
உருவாக்கியுள்ளது எனவும் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கவலை வெளியிட்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!