பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் பிரித்தானியா!

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (21) பாலஸ்தீனத்தை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்த G7 நாடுகளின் குழுவில் பிரித்தானியா முதல் உறுப்பினராக மாறும்.
பிரித்தானியாவைத் தவிர, பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த வாரம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த முடிவுக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பிரிட்டனுக்கு விஜயம் செய்தபோது பிரதமர் ஸ்டார்மருடனான சந்திப்பின் போது இதற்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் காசாவிற்கு எதிரான தொடர் போரை நிறைவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே ஒரே வழி என பல நாடுகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.