இன்றைய முக்கிய செய்திகள்

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையால் திட்டிய பிரேசில் ஜனாதிபதியின் மனைவி

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் 18, 19 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில், 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பிரதமர் மோடியும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையொட்டி ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான குழு விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரேசில் அதிபரின் மனைவி ஜன்ஜா டா சில்வா பேசினார்.

அப்போது திடீரென அங்குக் கப்பலின் ஹார்ன் சத்தம் கேட்டது. உடனே ஜன்ஜா டா சில்வா, “இது எலான் மஸ்க் தான் என்று நினைக்கிறேன்” என்று கிண்டல் செய்தார். தனக்கு எலான் மஸ்க்கை பார்த்து பயமில்லை என்ற கூறிய அவர், மஸ்க்கை கெட்ட வார்த்தையிலும் திட்டினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், எலான் மஸ்க் தனது மற்றொரு பதிவில், “ஜன்ஜா டா சில்வாவின் கணவரும் பிரேசில் அதிபருமான லூயிஸ் இனாசியோ லூயிஸ் அடுத்த தேர்தலில் தோற்கப் போகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரேசிலில், இந்தாண்டு ஒரு மாதத்திற்கு மேலாக எக்ஸ் சமூக வலைத்தளம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதனால், பிரேசில் அரசுக்கும், மஸ்கிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலைமையில் எலான் மஸ்க்கை பிரேசில் அதிபரின் மனைவி கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன