ஓரிகானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் விமானம்!

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் நேற்று (05.01) அவசரமாக ஓரிகானில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் பக்கவாட்டில், பயணிகள் இருக்கைகளுக்கு அருகில், மிகப் பெரிய துவாரம் ஏற்பட்டதுடன், காற்று உள்நுழைந்து பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது சம்பந்தமான புகைப்படம் ஒன்றை எடுத்த பயணி ஒருவர் அதை உள்ளுர் ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாராவது காயமடைந்தார்களா என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் 06 பணியாளர்களுடன் , ஓரிகானின் போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு, புறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)