உலகம்

ஓரிகானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் விமானம்!

அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் நேற்று (05.01) அவசரமாக ஓரிகானில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் பக்கவாட்டில், பயணிகள் இருக்கைகளுக்கு அருகில், மிகப் பெரிய துவாரம் ஏற்பட்டதுடன், காற்று உள்நுழைந்து பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சம்பந்தமான புகைப்படம் ஒன்றை எடுத்த பயணி ஒருவர் அதை உள்ளுர் ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் யாராவது காயமடைந்தார்களா என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் 06 பணியாளர்களுடன் , ஓரிகானின் போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவின் ஒன்டாரியோவுக்கு, புறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!