உலகம்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் அமுலுக்கு வரும் தடை – நிறுவனம் கொடுத்த விளக்கம்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் சில பொருட்களை தடை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் பேஜர், சாதனங்கள், வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புக் கருவிகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்துள்ளது.

லெபனானில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிறுவனத்தின் நடவடிக்கை வந்துள்ளது.

பயணிகள் விமானத்தில் செல்லும்போது அந்தச் சாதனங்களை வைத்திருக்க அனுமதி இல்லை.

டுபாய்க்குச் செல்லும், அங்கிருந்து வரும், அல்லது துபாய் வழி பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளும் பேஜர் சாதனங்களையும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புக் கருவிகளையும் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று நிறுவனம் குறிப்பிட்டது.

அந்தச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜர் சாதனங்களும் வாக்கி-டாக்கி தொலைத்தொடர்புக் கருவிகளும் வெடித்துச் சிதறின.

அதில் குறைந்தது 37 பேர் உயிழந்ததுடன் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமுற்றனர்.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!