பொழுதுபோக்கு

அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி…

விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து இந்த வாரமும் இரண்டாவது இடத்தையே பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் பரபரப்பான காட்சிகளை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இயக்குநர். இருந்தபோதிலும் முதலிடத்தை பிடிக்க தொடர் தடுமாறி வருகிறது.

விஜய் டிவியின் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொடரின் முத்து மற்றும் மீனா கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடரிலும் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்கள் மற்றும் அவர்களை சுற்றி சில கேரக்டர்கள் என குறைவான கேரக்டர்களிலேயே நிறைவான எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர்.

இதனிடையே, உயிருடன் திரும்பிவரும் அமிர்தாவின் கணவன் கணேஷ், அமிர்தாவை தேடி அவரது மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தா குறித்து விசாரிக்கிறார்.

அவரை உயிருடன் பார்க்கும் மாமியார் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அமிர்தாவின் மறுமணம் குறித்து அவரது பெற்றோர் சொல்லாமல் இருப்பது குறித்து தெரியவரும் நிலையில், சாதுர்யமாக பேசி, கணேஷை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

இதனால் ஆத்திரத்துடன் கதவை தட்டிவிட்டு கணேஷ் அந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறார். இதனிடையே, கேன்டீனில் பாக்கியாவை மீண்டும் ராதிகா வம்பிழுப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது. தொடர்ந்து அவரது டார்ச்சர்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!