ஐ.எஸ். கொடியை இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய சிறுவன் கைது!
ஐ.எஸ். IS பயங்கரவாத அமைப்பின் கொடியை இறக்குமதி செய்தார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா Australia , மெல்போர்னைச் Melbourne சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட மேற்படி கொடியைக் காவல்துறையினர் கைப்பற்றிய பின்னர், அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்படி சிறுவனின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையிலான தகவல்கள் அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதன்பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் முற்படுத்தப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.




