ஈரான்மீது ஆஸ்திரேலியா நிதித்தடை விதிப்பு!
ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவரும் ஆஸ்திரேலியா, அந்நாடுமீது மேலதிக நிதித் தடைகளையும் அறிவித்துள்ளது.
ஈரான் மக்கள்மீது அந்நாட்டு அரசால் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியே புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை அதிகாரிகள் 20 பேர் மற்றும் 3 நிறுவனங்களுக்கே நிதித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் இணைய முடக்கத்திற்கு எதிராக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong வெளியிட்டுள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை ஆஸ்திரேலியா பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான உயர் படை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





