உலகம்

ஈரான்மீது ஆஸ்திரேலியா நிதித்தடை விதிப்பு!

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவரும் ஆஸ்திரேலியா, அந்நாடுமீது மேலதிக நிதித் தடைகளையும் அறிவித்துள்ளது.

ஈரான் மக்கள்மீது அந்நாட்டு அரசால் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியே புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை அதிகாரிகள் 20 பேர் மற்றும் 3 நிறுவனங்களுக்கே நிதித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் இணைய முடக்கத்திற்கு எதிராக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong வெளியிட்டுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படையை ஆஸ்திரேலியா பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான உயர் படை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!