உலகம்

உக்ரைன் அதிபரை கொலை செய்ய முயற்சி: ரஷ்ய பெண் உளவாளி கைது

உக்ரைன் அதிபர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ரஷ்ய பெண் உளவாளியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ரஷ்ய -உக்ரைன் போர் கடந்த ஓராண்டுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு மாகாணங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மைகோலாவிவ் என்ற பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பார்வையி்ட்டார்.சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரை பாதுகாப்புபடையினர் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் ரஷ்ய பெண் உளவாளி என்பதும், ஜெலன்ஸ்கியை வேவு பார்த்தது மட்டுமின்றி, அவர் மீது தாக்குதல் நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

பெயர் வெளிப்படுத்தப்படாத அந்த பெண், உக்ரைன் ஜனாதிபதியின் நகர்வுகளை, சந்திக்கும் நபர்களை, செல்லும் பகுதிகளை ரஷ்யாவுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளார்.

தெற்கு மைகோலேவ் பகுதிக்கு ஜெலென்ஸ்கியின் வருகை பற்றி தகவல் தெரிவித்த நிலையில், ரஷ்யா அப்பகுதியில் ஒரு பெரிய வான்வழி தாக்குதலை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!