முதன்முறையாக இரட்டை வேடத்தில் கலக்க தயாராகும் அதர்வா
ஜீவா ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அதர்வா, முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்டது, இதன் படப்பிடிப்புதற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
ஜீவா ஷங்கர் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அதர்வா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஒரு தேசிய நாளிதழுக்கு பேட்டியளித்த அதர்வா,
இந்த படம் குறித்து முதலில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், இது எனக்கு ஒரு நல்ல சவாலை கொடுத்தது. அதன் பிறகே இதை தேர்வு செய்ததாகவும் கூறினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது, மேலும் பல காட்சிகள் கடல் அருகே உண்மையான அலைகளுடன் படமாக்கப்பட உள்ளது. படத்தில் தனது இரட்டை வேடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும் என்று அதர்வா விளக்கினார். புதிய படத்தின் படப்பிடிப்பை ரசித்து வருவதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.