பொழுதுபோக்கு

தனுஷ் படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர்… இப்படி ஒரு காரணமா?

அசோக் செல்வன் நடித்து வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் அசோக் செல்வன் ஒப்பந்தமாகி இருந்தார்.

ராயன் படத்தை தனுஷ் இயக்கி, நடித்து வெற்றி கண்டிருந்தார். இதைத்தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி வரும் தனுஷ் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இந்த படத்தில் சத்யராஜ், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வந்தனர்.

இதில் அசோக் செல்வனுக்கும் ஒரு கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்திருந்தார். ஆரம்பத்தில் தனுஷ் படம் என்பதால் கதையை கேட்காமல் அசோக் செல்வன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.

ஆனால் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாதது தெரியவந்துள்ளது.

இப்போதுதான் அசோக் செல்வன் தட்டு தடுமாறி ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்று நல்ல கதை உள்ள படங்களை கொடுத்து வருகிறார். கதாநாயகனாக நிறைய பட வாய்ப்புகள் அசோக் செல்வனுக்கு வந்தாலும் தனுஷ் கூப்பிட்டதற்காக இட்லி கடை படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்காது என்று தெரிந்தவுடன் இதிலிருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். தனுஷ் இதனால் அசோக் செல்வனின் கதாபாத்திரத்தை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இல்லையென்றால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் இட்லி கடை படப்பிடிப்பு இப்போது தேனியில் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் இப்படத்திற்கான அப்டேட்டுகளை விரைவில் கொடுக்க உள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்