இலங்கை செய்தி

‘குடு சலிந்து’வுக்கு பிடியாணை  

பிணையில் விடுவிக்கப்பட்ட “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிது மல்ஷிகா குணரத்னவை கைது செய்யுமாறு, பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு “குடு சலிந்து”வுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

எனினும் அவர், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (23) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தனர்.

அந்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம், “குடு சலிந்து”வை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்திருந்தது.

(Visited 49 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை