அர்ச்சுனாவின் முகத்திரை கிழிப்பு!
தான் கொலை அச்சுறுத்தல் விடுத்தாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிராகரித்தார்.
“ மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் நாடாளுமன்றம் வந்துள்ளேன். அந்தவகையில் புத்தளம் வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். இதனை செய்து தருவதாக அமைச்சரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, பெயர் பலகை வைக்குமாறு நாம் கோரியதாக கூறும் விடயம் தவறு. உறுப்பினர் (அர்ச்சுனா) இங்கு பொய் சொல்கின்றார். எவரையும் நாம் பயமுறுத்தவில்லை. உயர்ந்த சபையை தவறாக வழிநடத்த கூடாது. நபர்களை தனிப்பட்ட ரீதியில்தாக்க முற்படக்கூடாது.” எனவும் சைபல் எம்.பி. குறிப்பிட்டார்.
(Visited 7 times, 7 visits today)




