உலகம்

காசாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு பெரும் அவலம் – அவசர உதவி கோரும் அதிகாரிகள்

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசாவை இயற்கையும் தீவிரமாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

காசாவை நோக்கி நெருங்கி வரும் புயல் காரணமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகப் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள சுமார் பத்து இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

ஏற்படவுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக கரையோரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கூடாரங்களைச் சேதப்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவிகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல் காரணமாகத் தரைமட்டமாகியுள்ள கட்டடச் சிதைவுகள் மலைபோல் குவிந்துள்ளன. சுமார் 15 மில்லியன் தொன் எடையுள்ள சிதைவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில், பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால், அதனைச் சமாளிப்பது பெரும் சவாலான விடயம் என காசா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!