இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனம் பெற்றுள்ளது.
ஐந்து ஏலங்கள் சமர்பிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு ஆமோதித்துள்ளது.
ஏற்கனவே சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது பெட்ரோ சைனா நிறுவனமும் இலங்கையில் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.