இலங்கை

அங்கொடை நோயாளி உயிரிழப்பு;சந்தேக நபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல்

அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நோளாயர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் சனிக்கிழமை (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நோயாளர் உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் அனைவரும் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Two medical assistants arrested over death of a patient at the National Institute of Mental Health

அங்கொடை தேசிய மனநல நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 48 வயதான ஒருவர் கடந்த 25ம் திகதி உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினாலும் மனநல நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றினாலும் தனித்தனியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நோயாளியின் உயிரிழப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content