அமெரிக்காவின் மௌனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மௌனமும் புடினை ஊக்குவிக்கிறது – செலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை பொதுமக்களுக்கு எதிரான “பயங்கரவாத” தாக்குதல்கள் என்று கண்டனம் செய்துள்ளார்.
69 ஏவுகணைகள் மற்றும் 298 ட்ரோன்களால் தாக்கப்பட்டு 12 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.
அமெரிக்காவின் மௌனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மௌனமும் புடினை ஊக்குவிக்கிறது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை சாதாரண நகரங்கள் மீதான வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல்கள். சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டு சேதமடைந்தன. ரஷ்யாவின் பாரிய தாக்குதலைத் தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் மீட்புப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாத ரஷ்ய தாக்குதலும் ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளுக்கு போதுமான காரணமாகும். ரஷ்யா இந்தப் போரை இழுத்துச் செல்கிறது, மேலும் ஒவ்வொரு நாளும் கொலைகளைத் தொடர்கிறது.” எனத் தெரிவித்தார்.