உலகம்

30 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

அமெரிக்கா தனது சர்ச்சைக்குரிய பயணத்தடையை விரிவுப்படுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அறிவிப்பிற்கு அமைய ஏறக்குறைய 30இற்கும் மேற்பட்ட  நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு   கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள நாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் பாதுகாப்பு காரணங்களை காட்டி 12 நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்வோர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாக 30இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை விதிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்கம் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற கொள்கையில் கொண்டுள்ள தீர்க்கமான நடவடிக்கைகளை  எடுத்துக் காட்டுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!