பொழுதுபோக்கு

அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகளா? இது எப்போ?

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். மைனா படம் மூலம் பேமஸ் ஆன இவர், அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

சினிமாவில் உச்ச நடிகையாக இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடித்து வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு பின்னர் கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளன்று தன்னுடைய காதலனை அறிமுகப்படுத்திய அமலா பால், அவரை நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஜனவரி மாதம் ஜெகத் தேசாய் – அமலா பால் ஜோடி தாங்கள் பெற்றோர் ஆகப்போவதாக அறிவித்தனர்.

கர்ப்பமாக இருந்தபோது சினிமா புரமோஷன்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் அமலா பால். சமீபத்தில் பிருத்விராஜ் ஜோடியாக அவர் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது கர்ப்பகால போட்டோஷூட்டையும் நடத்தி அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இதனிடையே நேற்று மாலையில் நடிகை அமலா பாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்திகள் உலா வரத் தொடங்கின.

இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உண்மையில் அமலா பாலுக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லையாம். இதன்மூலம் இணையத்தில் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக பரவி வரும் தகவல் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content