பொழுதுபோக்கு

ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமா? அந்த குட் நியுஸ் என்ன தெரியுமா?

சீரியல் நடிகை ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி சமீபத்தில் குட் நியூஸ் சொல்ல உள்ளதாக அறிவித்தநிலையில், அது என்ன விஷயம் என்பதை ஆல்யா கூறிவிட்டார்.

ஒரு டான்சராக இருந்து பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் கதாநாயகியாக மாறியவர் ஆல்யா மானசா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஆல்யாவை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

ஆல்யா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். ஆல்யா குடும்பத்தில் இவர்களின் காதலுக்கு முதலில் சம்மதிக்காத நிலையில், பின்னரே ஏற்று கொண்டனர்.

சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடிக்கு தற்போது, இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்… ஆல்யா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த வாரம் இந்த ஜோடி, கூடிய விரைவில் நல்ல செய்தி ஒன்றை சொல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் மீண்டும் ஆல்யா கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஒருவழியாக அந்த குட் நியூஸ் என்ன என்பதை ஆல்யா தெரிவித்துள்ளார்.

இதுவரை அப்பார்ட்மெண்ட்டில் வாழ்ந்து வந்த, ஆல்யா – சஞ்சீவ் ஜோடி, வில்லா ஒன்றை வாங்கி உள்ளார்களாம்.

கூடிய விரைவில் அதன் கிரஹபிரவேசம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான கிளீனிங் வேளையில் இறங்கி உள்ளதாக கையில் துடப்பதோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 

alya_manasa

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, புதிய வில்லா வாங்கும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content