பொழுதுபோக்கு

அல்லு அர்ஜுனின் குழந்தைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் – நடந்தது என்ன?

புஷ்பா 2 படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்ததற்கு நீதி கோரி அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் வீட்டின் மீது சில போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து, அவரது குழந்தைகள் அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது உலக அளவில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூலை ஒருபுறம் குவித்து வருகின்றது.

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் போடப்பட்டது. அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படம் ஓடும் திரையரங்கிற்கு வந்தார்.

எனவே அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பலர், அவரை பார்க்க முன்னியடித்து கொண்டு முன்னேறியதால் போலீசார் தடியடி நடத்தினர். அதே போல் அல்லு அர்ஜுன் பவுன்சர்கள் மக்களை தள்ளிவிட்டதிலும் பலர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் 35 வயதான பெண் உயிரிழந்தார்.

அவருடைய 8 வயது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த சிறுவன் அபாயகட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது அல்லு அர்ஜுனுக்கு எதிராக இந்த சம்பவம் திரும்பியுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் வீடு சூறையாடப்பட்டது.

அவரது குழந்தைகள் அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆன்லைனில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அல்லு அர்ஹா மற்றும் அல்லு அயான் ஆகியோர் குடும்ப உறுப்பினர்களுடன் காரில் வீட்டை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் இன்னும் இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், அன்று மாலையே ஊடகங்களிடம் பேசினார். அவர்களது வீட்டின் மீதான தாக்குதலைக் கடுமையாக விமர்சித்த அவர், இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

ரேவதி மரணம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் டிசம்பர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் விடுதலை செய்யப்பட்டாலும் ஒரு நாள் சிறையில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

(Visited 37 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!