பொழுதுபோக்கு

“விடாமுயற்சி”க்கு மீண்டும் விஷ்வரூப பிரச்சினை எழுந்தது

விடாமுயற்சி படத்தின் புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி திரை கதையை தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம்.

இதுவரை கதை கேட்காமல் இருந்த நடிகர் அஜித்குமார் கதையைக் கேட்டு சம்மதம் சொல்லிவிட்டாராம். இதனால் படத்தின் ஒரு முக்கியமான வேலை முடிந்து இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் கதை சொல்லி அதில் திருப்தி இல்லாமல் தான் அஜித் அவரை நீக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது மகிழ்ந்திருமேனி சொன்ன கதை நடிகர் அஜித்குமாருக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். இதனால் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மற்றொரு சிக்கல் இந்த படத்திற்கு ஆரம்பித்து இருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து விட்டதால் முன்னணி ஹீரோக்கள் பலரும் அவர்களுடைய படங்களில் த்ரிஷாவை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரிஷா லியோ வில் ஒப்பந்தமாகும் பொழுதே, அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தையும் நடந்தது.

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியும் இந்த படத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை. த்ரிஷாவுக்கு படத்தில் ஒப்பந்தமானதற்கான அட்வான்ஸ் கொடுக்கப்படவில்லை. இதனால் காத்திருந்து பார்த்த த்ரிஷா இது செட் ஆகாது என அடுத்தடுத்த படங்களுக்கு தன்னுடைய கால் சீட்டுகளை கொடுத்து விட்டார் தற்போது விடாமுயற்சி பட குழு த்ரிஷாவிடம் மீண்டும் பேசி இருக்கிறது.

ஆனால் திரிஷா அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷுட்டுகள் கொடுத்து விட்டதால் இப்போது இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விடாமுயற்சி படக்குழு மீண்டும் த்ரிஷாவிடம் பேசிப் பார்க்கலாமா அல்லது வேறு ஏதாவது ஹீரோயினை நடிக்க வைக்கலாமா என டிஸ்கஷன் செய்து வருகிறார்கள். எல்லாம் முடிந்த நிலையில் தற்போது கதாநாயகி பிரச்சனை விடாமுயற்சி படத்திற்கு பூதாகரமானதாக மாறியிருக்கிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content