பொழுதுபோக்கு

திடீரென இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா கிளம்பும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது பல்வேறு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் இதில் நடித்துள்ளனர். குறிப்பாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொள்வதற்காக சென்னை திரும்பி உள்ளார்.

அவர் ஆடியோ லாஞ்சில் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி அவர் இமயமலைக்கு செல்ல உள்ளாராம். அங்கு 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளாராம்.

இந்த பயணத்தின் போது இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினிகாந்த் விசிட் அடிக்க உள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தான் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இடையே உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகள் செல்லாமல் இருந்த ரஜினி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் செல்லாமல் இருந்தார்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இமயமலைக்கு செல்ல உள்ளார் ரஜினி. ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டி தான் அவர் இந்த ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content