பொழுதுபோக்கு

நடிகை கீர்த்திக்கும் அசோக் செல்வனுக்கும் டும்.. டும்.. டும்..

பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கும் இளம் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் அடுத்த மாதம் நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் அனைத்து நடிகர்களுமே, நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. அந்த வகையில், ஆரம்பத்தில் பல போராட்டங்களை கடந்து, தோல்விகளையும், வலிகளையும் கடந்து இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளவர் இளம் நடிகர் அசோக் செல்வன்.

இவருக்கும், பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன் திரைக்கதையை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அப்படி இவர் தேர்வு செய்து நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்  சபா நாயகன் என்கிற படமும் இவரின் கைவசம் உள்ளது.

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அசோக் செல்வனுக்கும், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் மகளும், இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் செப்டம்பர் 13 ஆம் தேதி, நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 17 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்