பொழுதுபோக்கு

போதை வழக்கில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவு… வலைவீசி தேடும் போலீஸ்

போதை வழக்கில் நடிகர் கிருஷ்ணா தலைமறைவு… வலைவீசி தே

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதான நிலையில், இதில் பலருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஸ்ரீகாந்தை சிக்க வைத்த பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோர் நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருளை பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்திருந்தனர். இதனால் நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் சென்னையில் இருந்ததால் அவரை உடனடியாக வரவழைத்து விசாரித்து கைது செய்தனர். ஆனால் நடிகர் கிருஷ்ணா சென்னையில் இல்லாததால் அவரை விசாரணைக்கு ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதுமட்டுமின்றி ஸ்ரீகாந்த் கைதானதை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமறைவாக உள்ள நடிகர் கிருஷ்ணாவை தற்போது போலீசார் வலைவீசி தேடி வருகிறார்களாம். அவரைப்பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தற்போது கேரளா விரைந்துள்ளார்களாம். நடிகர் கிருஷ்ணா கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அடுத்தடுத்து பல்வேறு பிரபலங்களும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!