பொழுதுபோக்கு

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்க அல்லு அர்ஜூன் போட்ட மெகா திட்டம்….

நடிகர் அல்லு அர்ஜூன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு சிறந்த என்டர்டெயின்மெண்டை கொடுத்து வருகிறார்.

இவரது அடுத்தடுத்த படங்கள் ரசிக்களை கவர்ந்துவரும் சூழலில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாஸ் ஹிட் கொடுத்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்திலும் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ முதலானவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப் படமும் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதற்காக அல்லு அர்ஜூன் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

என்னது சம்பளம் இல்லாமல் நடிக்கிறாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். சம்பளம் இல்லாமலேயே கல்லா கட்டும் வித்தையை இந்தப் படத்தில் அவர் அல்லு அர்ஜூன் பயன்படுத்தியுள்ளார்.

படத்தின் லாபத்தில் 33 சதவிகிதம் சம்பளமாக வாங்க ஒப்பந்தமிட்டுள்ளாராம் அல்லு அர்ஜூன். மிகுந்த எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள புஷ்பா 2 படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று கூறப்படுமநிலையில், இது நிகழ்ந்தால் அவருக்கு 330 கோடி ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாறாக படத்தின் வசூல் குறைந்தாலும் 300 கோடி வரை அவருக்கு சம்பளமாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் இந்த வெற்றி சாத்தியப்பட்டால், தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நபராக அல்லு அர்ஜூன் மாறிவிடுவார். ரஜினி, அஜித், விஜய்யை காட்டிலும் தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக அல்லு அர்ஜூன் மாறுவார் என்றும் கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content