பொழுதுபோக்கு

ஆலியா பட்டுக்கே ஆப்பு வைத்த பெண் : 76 லட்சம் அபேஸ்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி, ஜூலை 8 ஆம் தேதி மாலை ஜூஹு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வேதிகா மீது பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வேதிகா ஆலியா மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 76 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளார்.

வேதிகா மீதான புகார் பதிவு செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

போலீசார் வெளியிட்ட தகவல்களின்படி, வேதிகா ஆலியாவின் போலியான கையொப்பத்தைப் பயன்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தின் கணக்குகளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் ரூபாயை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எடர்னல் சன்ஷைன் நிறுவனத்தின் நிதியிலிருந்தும் ஆலியாவின் தனிப்பட்ட கணக்குகளிலிருந்தும் 76 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆலியாவின் தாயாரும், நடிகையுமான சோனி ராஸ்டன் ஆகியோர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி மீது கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அப்போதிருந்து விசாரணை நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று மும்பை போலீஸ் குழு ஒன்று வேதிகாவை பெங்களூருவில் கண்டுபிடித்து கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு விவரங்களையும் சேகரிக்க போலீசார் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், ஆலியாவோ அவரது குழுவோ இதுவரை இதுகுறித்து எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.

 

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content