உலகம்

மீண்டும் ஓர் அச்சுறுத்தல் – உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த WHO

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை எனவும் மீண்டும் ஒரு அலை காத்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே, நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தொற்று வரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திரிபுகளாக உருமாறும் எனவும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில், சீனாவில் XXB வேரியண்ட் எனும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!