பாகிஸ்தானில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைக் குண்டு தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சியில் வெளிநாட்டினர் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தது இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜப்பானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது.
பாகிஸ்தானில் அரசாங்கத்தை எதிர்க்கும் பயங்கரவாதிகள் சீனா உள்ளிட்ட வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)