ஐரோப்பா

தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கொன்ற சுறா பிடிபட்டது

சுற்றுலா சென்றிருந்த ரஷ்ய இளைஞர் ஒருவரை அவரது தந்தையின் கண் முன்னே கபளீகரம் செய்த சுறா மீனை அதிகாரிகள் பிடித்துள்ளார்கள்.

ரஷ்யாவிலிருந்தால் உக்ரைனுடன் போருக்குச் செல்ல நேரிடலாம் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ எகிப்துக்கு தன் தந்தையுடன் சுற்றுலா சென்றுள்ளார் விளாடிமிர் (23) என்ற இளைஞர்.ஆனால், Hurghada என்னுமிடத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்த விளாடிமிர் கடலில் நீந்திக்கொண்டிருக்க, அவரது தந்தை கரையிலிருந்தவண்ணம் அவரைக் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது திடீரென அங்கு வந்த ஒரு சுறா, விளாடிமிரைத் தாக்கத் துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் அலறி சத்தமிட, தந்தையின் கண் முன்னேயே விளாடிமிரை கபளீகரம் செய்துவிட்டது அந்த சுறா.

தந்தை கண் முன்னே ரஷ்ய இளைஞரை கபளீகரம் செய்த சுறா பிடிபட்டது | Shark Caught Raping Russian Boy Front Of Father

இந்நிலையில், விளாடிமிரைக் கொன்ற சுறாமீனை அதிகாரிகள் பிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். அது ஒரு புலிச் சுறா என அவர்கள் கூறியுள்ளார்கள்.அந்த சுறா மீனை மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டுவரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த சுறா இதற்குமுன் வேறு யாரையாவது கொன்றுள்ளதா என்பதை அறியும் ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள் இறங்கியுள்ளார்கள்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்