இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வானில் ஏற்படும் அரிய நிகழ்வு – இலங்கையர்களும் பார்வையிடலாம்

வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் காட்சியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் ஒரு அரிய வானக் காட்சி நடைபெறுகிறது, அங்கு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 7 கோள்களை வரிசையாகக் காணலாம்.

28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இலங்கையிலிருந்தும் இந்தக் காட்சி தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமியைத் தவிர, சூரிய குடும்பத்தை சேர்ந்த புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் வானில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கின்றன.

இந்த அரிய நிகழ்வு மீண்டும் 2040ஆம் ஆண்டில்தான் நிகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!