ஆஸ்திரேலியா

சிட்னியில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாகத் தரையிறங்கிய குவாண்டாஸ் விமானம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பிரிஸ்பன் நகருக்குக் கிளம்பிய குவாண்டாஸ் நிறுவன விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவசரமாகத் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தின் இயந்திரத்திலிருந்து பலத்த ஓசை கேட்டதையடுத்து அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கிளம்பிய விமானம் உடனே திரும்பி, பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக சிட்னி விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிட்னி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டதை அடுத்து விமான ஓடுபாதைக்கு அருகே அமைந்துள்ள புல்வெளியில் தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் கூறின.

விமான இயந்திரத்தால் அவ்வாறு தீ மூண்டதா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

“விமானப் போக்குவரத்து மீட்பு, தீயணைப்புப் பிரிவினர் புல்வெளியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிட்னி விமான நிலையம் அவர்களுக்கு உதவி வருகிறது,” என்று தீயணைப்புத் துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

(Visited 51 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!