இலங்கை செய்தி

இலங்கையில் விரைவில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

இலங்கையில் வீட்டுக் காவலில் வைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை வீட்டுக் காவலில் வைக்க திட்மிட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

சிறு குற்றங்களுக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுவதுடன், அவர்கள் சமூகத்தில் பெரும் குற்றவாளிகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

அவ்வாறான நிலைமையை மாற்றி, சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களை சிறையில் அடைக்காமல் வீட்டுக்காவலில் வைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து, ஆவணம் ஒன்றை தயாரித்து அதன் அடிப்படையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஸ தெரிவித்தார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை