இலங்கை செய்தி

இலங்கையில் அதிகாலையில் உலுக்கிய கோர விபத்து – மூவர் பலி – இருவர் காயம்

நாரம்மல-குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகியுள்ளது.

இதன் போது கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஓட்டுநர், ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து நாரம்மல மற்றும் குருணாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையை சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் குருணாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலங்கள் நாரம்மல மற்றும் குருணாகல் மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை