300 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுமி பலி

கடந்த செவ்வாய்கிழமை மதியம், மத்திய பிரதேச மாநிலம் முங்காவாலியில் இரண்டரை வயது சிறுமி 300 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
சிறுமியை மீட்பதற்காக சுமார் 52 மணித்தியாலங்களுக்கு மேலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பலனாக நேற்று (08) பிற்பகல் சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் சிறுமி உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மை காலமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)