இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரை சுமந்து செல்ல வந்த ராட்சத விமானம்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான MI 17 உலங்குவானூர்தியை ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக மத்திய ஆபிரிக்காவிற்கு எடுத்துச் செல்வதற்காக உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov AN 124 விமானம் நேற்று (28) இலங்கை வந்தடைந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானத்திற்கு இலங்கை விமானப்படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Antonov AN 124 தற்போது உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக கருதப்படுகிறது. அன்டோனோவ் 150 டன்களுக்கு மேல் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

முன்னதாக, அன்டோனோவ் ஏஎன் 225 விமானம் உலகின் மிகப்பெரிய விமானமாக கருதப்பட்டது.

அந்த விமானமும் 6 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்திருந்தது, துரதிஷ்டவசமாக அந்த விமானம் 2023 ஆம் ஆண்டு ரஷ்ய-உக்ரைன் போரின் போது உக்ரைனில் உள்ள கீவ் சர்வதேச விமான நிலையத்தில் ரஷ்ய விமானத் தாக்குதலில் அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
See also  தனி பாதுகாப்பு பிரிவை கோறும் ரணில்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content