உலகம் செய்தி

பாகிஸ்தானில் மசூதியை இலக்கு வைத்து வெடி குண்டு தாக்குதல்!! 50 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலுசிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் முகமது நபியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மக்கள் கூடியிருந்த வேளையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஸ்துங் நகரில் நடைபெற்ற மதக் கூட்டத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என்று அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நிலைமையை அடுத்து அதிகாரிகள் உடனடியாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் இரு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உள்ளூர்வாசிகள் முயற்சித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் சர்ப்ராஸ் புக்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகவும் கேவலமான செயல் என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி