இலங்கை செய்தி

இலங்கையில் 24 வயது யுவதியின் மோசமான செயல் – சிக்கிய பல லட்சம் ரூபாய் பணம்

 

70 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயதுடைய யுவதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகத்துரே பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து 28 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகநபர் பெண்ணும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!