ஐரோப்பா

ஜெர்மனியில் பெண் மருத்துவருக்கு ஒருவருக்கு மர்ம நபரால் காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியில் பெண் மருத்துவர் ஒருவர் மர்ம நபரால் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியில் குறிப்பாக கொலோன் பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

குறித்த பெண் மருத்துவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 மர்ம நபர்களால் கடத்திச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கடத்தியவர்கள் ஒரு வீட்டில் குறித்த பெண்ணை ஒரு நாள் அடைத்ததாகவும், பின்னர் அவரை விடுதலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒரு நபர் குறித்த வைத்தியரின் நோயாளியாக சிகிச்சை பெற்றவர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 39 மற்றும் 53 வயதுடைய 2 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்பொழுது அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!