ஐரோப்பா

பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

பிரான்ஸில் ஒரே நாளில் மூன்று பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Strasbourg (Bas-Rhin) நகரில் வசிக்கும் 24 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று அவர் மூன்று இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். முதலாவது சம்பவம் Boulevard Sébastopol வணிக வளாகத்துக்கு அருகே திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். கண்காணிப்பு கமரா ஒன்றில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன.

பின்னர் அன்றைய நாளிலேயே பிற்பகலில் வீடொன்றுக்குள் நுழைந்து இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.

அப்பெண் பலத்த சத்தமாக குரல் எழுப்ப, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் சில நிமிடங்களில் route du Polygone பகுதியில் வைத்து மூன்றாவது இளம் பெண்ணை பாலியல் உன்புறுத்தல் மேற்கொண்டார்.

கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!