பொழுதுபோக்கு

இது என்ன புது டுவிஸ்ட்…. இந்த நடிகைய இனி சினிமாவுல பார்க்க முடியாதா?

சினிமாவில் நல்ல மார்க்கெட்டோடு இருக்கும் பிரபல நடிகை ஒருவர் சினிமாவை விட்டு ஒதுங்க முடிவு எடுத்திருக்கிறார்.

முன்பெல்லாம் நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். கல்யாணத்தை முடித்துவிட்டு ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.

குறுகிய காலத்திலேயே அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தான் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்க முடிவெடுத்து இருப்பது.

காஜல் அகர்வால் நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இவருடைய கணவர் மிகப்பெரிய தொழில் அதிபர்..

திருமணத்திற்குப் பிறகு காஜல் புது படங்கள் எதிலும் கமிட்டாகவே இல்லை. ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் தான் நடித்தார்.

அப்படி அவர் திருமணத்திற்கு முன்பு கமிட் ஆன படம் தான் இந்தியன் 2. தற்போது அதில் மட்டும் நடித்துக் கொடுத்திருக்கிறார். புதிதாக யாராவது படத்திற்காக அணுகினால் காஜல் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாராம்.

நடிகர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் காஜல் அகர்வாலிடம் கால்சீட்டுக்காக சென்று இருக்கிறார்.

அப்போது அவர் நான் இனிமேல் நடிக்கப் போவதாய் இல்லை சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம். இதன் மூலம் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்குவது உறுதியாக இருக்கிறது.

காஜல் அகர்வாலின் இந்த முடிவுக்கு அவருடைய கணவர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

நல்ல மார்க்கெட் இருந்தும் திருமணத்திற்கு பின் இனி நடிக்க வேண்டாம், குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் பார்த்தால் போதும் என அவருடைய கணவர் கிடுக்கு பிடி போட்டதே இந்த முடிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content