இலங்கை செய்தி

மாகாண சபை தேர்தலை அரசு திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில்  உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில்  தீர்வொன்றை காண்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 06 ஆம் திகதி இந்த பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி 06 ஆம் திகதி முதல் எதிர்க்கட்சி தனது பிரதிநிதிகளாக ரஞ்சித் மத்துமபண்டார, நான் (மனுதாரர்), நிசாம் காரியப்பர் மற்றும் மனோ கணேசன் ஆகிய நான்கு பெயர்களையும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்தும் அரசாங்கம் இதுவரை தமது பெயர்களை அனுப்பவில்லை.

இது மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தெளிவான நகர்வாகும். வெளிவிவகார அமைச்சர் இன்று காலை உள்நாட்டு பொறிமுறைகள் பற்றிப் பேசினார்.

வன்முறைகள் மீண்டும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், குறைந்தபட்சம் ஏதாவதொரு அதிகாரப் பகிர்வு மாதிரியாவது இருக்க வேண்டும். ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் அரசாங்கம் சார்பில் நீங்கள் இன்னும் பெயர்களை வழங்கவில்லை.

இது மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப்போடும் ஒரு திட்டமிட்ட செயலாகும். பிரதமரும் இந்தச் சபையில் இருக்கிறார். பிரதமர் அவர்களே, தயவுசெய்து இதில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள். எதிர்க்கட்சி தனது பெயர்களை ஏற்கனவே அனுப்பிவிட்டது” என்றார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!